Siru Ponmani Song Lyrics

in Kallukkul Eeram

பாடகர்கள் : இளையராஜா, மலேசியா வாசுதேவன்

மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்

பெண் : சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்
நிதமும் தொடரும் கனவும் நினைவும் இது மாறாது
ராகம் தாளம் பாவம் போல நானும் நீயும் சேர வேண்டும்

ஆண் : சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்

பெண் : விழியில் சுகம் பொழியும்
இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும்

பெண் : விழியில் சுகம் பொழியும்
இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும்

பெண் : தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்
தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்
அழியாதது அடங்காதது அணை மீறிடும் உள்ளம்
வழி தேடுது விழி வாடுது கிளி பாடுது உன் நினைவினில்

பெண் : சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்

பெண் : நதியும் முழு மதியும் இரு இதயம்தனில் பதியும்
ரதியும் அதன் பதியும் பெறும் சுகமே உதயம்
நதியும் முழு மதியும் இரு இதயம்தனில் பதியும்
ரதியும் அதன் பதியும் பெறும் சுகமே உதயம்

பெண் : விதை ஊன்றிய நெஞ்சம் விளைவானது மஞ்சம்
விதை ஊன்றிய நெஞ்சம் விளைவானது மஞ்சம்
கரை பேசுது கவி பாடுது கலந்தால் சுகம் மிஞ்சும்
ஆண் : உயிர் உன் வசம் உடல் என் வசம்
பயிரானது உன் நினைவுகள்

பெண் : சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
ஆண் : இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்
பெண் : நிதமும் தொடரும் கனவும் நினைவும் இது மாறாது
ஆண் : ராகம் தாளம் பாவம் போல நானும் நீயும் சேர வேண்டும்

பெண் : சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
ஆண் : இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்

Leave a Comment