Chinna Chinna Sol Eduthu Song Lyrics

in Rajakumaran

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : சின்ன சின்ன
சொல்லெடுத்து சொந்தம்
சொல்ல நீ போ தூது சொன்ன
சொல்லில் குற்றமில்லை
சுத்தம் என்று நீ போய் கூறு

பெண் : சின்ன சின்ன
சொல்லெடுத்து சொந்தம்
சொல்ல நீ போ தூது சொன்ன
சொல்லில் குற்றமில்லை
சுத்தம் என்று நீ போய் கூறு

பெண் : தனியாக மாமன்
துணை தேடி வாட புரியாமல்
நானும் பரிகாரம் தேட

பெண் : சின்ன சின்ன
சொல்லெடுத்து சொந்தம்
சொல்ல நீ போ தூது சொன்ன
சொல்லில் குற்றமில்லை
சுத்தம் என்று நீ போய் கூறு

பெண் : கண்ணீர் கரைந்துருகும்
கன்னி மெழுகானேன் நானே
நீ பாரடி

பெண் : மன்னன் மனம் கலங்க
மண்ணில் சருகானேன் பூவே
நீ கூறடி

ஆண் : நித்திரையை நானும்
மூடி நித்தம் ஒரு கானம் பாடி
உத்தமியை தேடி தேடி கத்தும்
ஒரு வானம் பாடி

பெண் : உன்னுதட்டில்
பொய்யை வைத்து
முள்ளில் தைத்த
பூவாய் ஆனேன்
ஆண் : என் மனதில்
பாசம் வைத்து கல்லில்
செய்த தேராய் போனேன்
பெண் : அலை மேல்
படகாய் ஆனேன்

ஆண் : சின்ன சின்ன
சொல்லெடுத்து சொந்தம்
சொல்ல நீ போ தூது சொன்ன
சொல்லில் குற்றமில்லை
சுத்தம் என்று நீ போய் கூறு

ஆண் : சொல்லால் விளைந்ததிந்த
சொந்தக்கதை தானே
பூவே நீ கேளடி

ஆண் : பெண்ணே வருத்தமில்லை
நெஞ்சில் என்ன பாரம்
நீயே போய் கூறடி

பெண் : கன்னிமையை மீறும்
ஈரம் கன்னி இவள் சோகம்
போரும் வெண்ணிலவை
மூடும் மேகம் விட்டு
விலகாதோ தூரம்

ஆண் : வண்ணக்கிளி
போனபின்னே தன்னந்தனி
ஆனேன் நானே
பெண் : எண்ணி எண்ணி
ஆவதென்ன கண்கள்
உறங்காயோ மாமா
ஆண் : உயிர் போய்
உடலானேன்

ஆண் : சின்ன சின்ன
சொல்லெடுத்து சொந்தம்
சொல்ல நீ போ தூது சொன்ன
சொல்லில் குற்றமில்லை
சுத்தம் என்று நீ போய் கூறு

ஆண் : குயிலோடு சேரு
ஒரு பாட்டு கேளு அவள்
சோகம் தீர வழி நீயும்
பாரு

பெண் : சின்ன சின்ன
சொல்லெடுத்து சொந்தம்
சொல்ல நீ போ தூது சொன்ன
சொல்லில் குற்றமில்லை
சுத்தம் என்று நீ போய் கூறு

Leave a Comment