Vaanam Thottu Pona Song Lyrics

in Thevar Magan

பாடகர்கள் : பாலசுப்ரமண்யம் மற்றும் குழு

இசை அமைப்பாளர் : இளையராஜா

குழு : ஹா….ஆஅ……ஆஅ….

ஆண் : வானம் தொட்டு போனான்….
மானமுள்ள சாமி…ஓஓ.
வானம் தொட்டு போனான்
மானமுள்ள சாமி

ஆண் : தேம்புதைய்யா பாவம்
தேவர்களின் பூமி
பட்டத்துக்கு வேறு
சிற்றரசன் யாரு
தங்கத்துக்கு வேறு
மாற்று உண்டா கூறு

ஆண் : திருந்தாம போச்சே
ஊருசனந்தான்
தத்தளிச்சி வாடுதைய்யா
ஏழை இனந்தான்

ஆண் : போற்றி பாடடி பொண்ணே….
குழு : ஹா…ஆஅ……
ஆண் : தேவர் காலடி மண்ணே….
குழு : ஹா…ஆஅ……

குழு : ஹா…ஆஅ……ஆஅ……

ஆண் : வெட்டறுவா தாங்கி…ஓ…
வீசுகிற ஊரில்… ஓஓ
வெட்டறுவா தாங்கி
வீசுகிற ஊரில்

ஆண் : வெள்ளக் கொடி தூக்கி
வந்தவணும் நீயே…
நல்லவழி நீ தான்
சொல்லி என்ன லாபம்
சொன்னவன தானே
சூழ்ந்ததின்று பாவம்

ஆண் : கலங்காதே ராசா
காலம் வரட்டும்
நள்ளிரவு போனாப் பின்னே
வெள்ளி முளைக்கும்

ஆண் : போற்றி பாடடி பொண்ணே….
குழு : ஹா…ஆஅ……
ஆண் : தேவர் காலடி மண்ணே….
குழு : ஹா…ஆஅ……

ஆண் : தெக்கு திசை ஆண்ட
மன்னர் இனந்தாம்…
முக்குலத்தை சேர்ந்த
தேவர் மகன்தான் ஓய்

ஆண் : போற்றி பாடடி பொண்ணே….
குழு : ஹா…ஆஅ……
ஆண் : தேவர் காலடி மண்ணே….
குழு : ஹா…ஆஅ……

Leave a Comment