in Annakili
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : சொந்தம் இல்லை பந்தம் இல்லை
வாடுது ஒரு பறவை
அது தேடுது தன் உறவை
அன்பு கொள்ள ஆதரவாய்
யாரும் இல்லை உலகில்
அது வாழுது தன் நிழலில்
பெண் : அக்கக்கோ எனும் கீதம்
அதுதானே அதன் வேதம்
பெண் : சொந்தம் இல்லை பந்தம் இல்லை
வாடுது ஒரு பறவை
அது தேடுது தன் உறவை
அன்பு கொள்ள ஆதரவாய்
யாரும் இல்லை உலகில்
அது வாழுது தன் நிழலில்
பெண் : அக்கக்கோ எனும் கீதம்
அதுதானே அதன் வேதம்
பெண் : கோவில் உண்டு தீபம் உண்டு
தெய்வம் உண்டு மலர்கள் உண்டு
பூஜை மட்டும் காண வரம் இல்லையே
பெண் : கோவில் உண்டு தீபம் உண்டு
தெய்வம் உண்டு மலர்கள் உண்டு
பூஜை மட்டும் காண வரம் இல்லையே
பெண் : ஓடம் உண்டு நதியும் உண்டு
நதியினிலே வெள்ளம் உண்டு
அக்கரைதான் அருகில் வரவில்லையே
இக்கரையில் குருவிக்கென்ன வேலையே
அக்கக்கோ எனும் கீதம்
அதுதானே அதன் வேதம்
பெண் : சொந்தம் இல்லை பந்தம் இல்லை
வாடுது ஒரு பறவை
அது தேடுது தன் உறவை
அன்பு கொள்ள ஆதரவாய்
யாரும் இல்லை உலகில்
அது வாழுது தன் நிழலில்
பெண் : பூவென்றால் தேனை வைத்து
பழத்துக்குள்ளே சாறை வைத்து
பிறவிக்கெல்லாம் பெரும்
பயனை வைத்தானே
பெண் : பூவென்றால் தேனை வைத்து
பழத்துக்குள்ளே சாறை வைத்து
பிறவிக்கெல்லாம் பெரும்
பயனை வைத்தானே
பெண் : பாழும் அந்த குருவி என்ன
பாவங்களை செய்ததென்று
பரிசாக கண்ணீரை தந்தானே
நாள் முழுதும் கண்ணீரை தந்தானே
அக்கக்கோ எனும் கீதம்
அதுதானே அதன் வேதம்
பெண் : சொந்தம் இல்லை பந்தம் இல்லை
வாடுது ஒரு பறவை
அது தேடுது தன் உறவை
அன்பு கொள்ள ஆதரவாய்
யாரும் இல்லை உலகில்
அது வாழுது தன் நிழலில்