பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ
இங்கு வந்ததாரோ…..
பெண் : பாஞ்சாலி பாஞ்சாலி
பெண் : கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ
அவர் என்ன பேரோ
பெண் : பரஞ்சோதி பரஞ்சோதி
ஆண் : கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ
இங்கு வந்ததாரோ…..
கன்னி பூவோ பிஞ்சு பூவோ
ஏழை குயில் கீதம் தரும் நாதம்
அது காற்றானதோ….தூதானதோ….
பெண் : கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ
அவர் என்ன பேரோ
பாட்டு பாடும் கூட்டத்தாரோ
ஏழை குயில் கீதம் தரும் நாதம்
அது கொண்டாந்ததோ என்னை இங்கு
ஆண் : கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ
ஆண் : பாடல் ஒரு கோடி செய்தேன்
கேட்டவர்க்கு ஞானம் இல்லை
ஆசை கிளியே வந்தாயே பண்ணோடு
நான் பிறந்த நாளில் இது நல்ல நாளே
சின்ன சின்ன முல்லை கிளி பிள்ளை
என்னை வென்றாளம்மா
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ
பெண் : ஊருக்கு போன பொண்ணு
உள்ளூரு செல்ல கண்ணு
கோவில் மணி ஓசை கேட்டாளே வந்தாளே
பாவம் உந்தன் கச்சேரிக்கு பொண்ணு நானா
பாடும் வரை பாடு தாளம் போடு அதை நீயே கேளு
கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ
ஆண் : என் மனது தாமரை பூ
உன் மனது முல்லை மொட்டு
காலம் வருமே நீ கூட பெண்ணாக
பெண் : ஊரில் ஒரு பெண்ணா இல்லை தேடி பாரு
நல்ல பெண்ணை கண்டால் கொஞ்சம் சொல்லு
ஆண் : அது நீதானம்மா
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ
இங்கு வந்ததாரோ
பெண் : பாட்டு பாடும் கூட்டத்தாரோ
ஆண் : ஏழை குயில் கீதம் தரும் நாதம்
பெண் : அது கொண்டாந்ததோ என்னை இங்கு
கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ