பாடகி : எஸ். பி. ஷைலஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : சந்தனக்கிளியே செண்பக பூவே
கண்ணுல ஏன் தான் கலக்கமோ
பெண் மலரே நீ வளர்ந்தா கண்ணீரு தேவப்படும்
கண்ணுல நீரு வேணா கண்ணு…….
பெண் : சந்தனக்கிளியே செண்பக பூவே
கண்ணுல ஏன் தான் கலக்கமோ
பெண் : என்னென்ன நாளில என்னென்ன நடக்கும்
என்பது யாருக்கும் தெரியாதம்மா
பூமியில் நீ ஒரு பொண்ணாக பொறந்தா
ஒனக்குன்னு ஆசையும் கூடாதம்மா
பெண் : பெண் மனசோ பொன் மனசு சொல்வத நீ கேளு
பெத்தவர் பெருங்கடன் பெண்ணால தீரும்
உத்தமன் மனக்கொர எப்போது மாறும்
பெண் : சந்தனக்கிளியே செண்பக பூவே
கண்ணுல ஏன் தான் கலக்கமோ
பெண் மலரே நீ வளர்ந்தா கண்ணீரு தேவப்படும்
கண்ணுல நீரு வேணா கண்ணு…….
பெண் : சந்தனக்கிளியே செண்பக பூவே
கண்ணுல ஏன் தான் கலக்கமோ….