Vidai Kodu Engal Naadae Song Lyrics

in Kannathil Muthamittal

பாடகர்கள் : எம். எஸ்.விஸ்வநாதன், பல்ராம்,
பெபிமணி, ஏ. ஆர். ரெய்ஹானா
மற்றும் மாணிக்க வினாயகம்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

ஆண் : விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்போமா

ஆண் : உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும்
ஊர்வலம் போகின்றோம்…ஓஹோ

ஆண் : விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்போமா

குழு : உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும்
ஊர்வலம் போகின்றோம்..ஓஹோ..

ஆண் : கந்தல் ஆனாலும் தாய் மடி போல்
ஒரு சுகம் வருமா… வருமா…
கந்தல் ஆனாலும் தாய் மடி போல்
ஒரு சுகம் வருமா… வருமா…

ஆண் : சொர்க்கம் சென்றாலும் சொந்த ஊர் போல்
ஒரு சுதந்திரம் வருமா… வருமா…
கண் திறந்த தேசம் அங்கே
கண் மூடும் தேசம் எங்கே..
கண் திறந்த தேசம் அங்கே
கண் மூடும் தேசம் எங்கே…

ஆண் : பிரிவோம் நதிகளே
பிழைத்தால் வருகிறோம்
மீண்டும் தாயகம் அழைத்தால் வருகிறோம்
கண்ணீர் திரையில் பிறந்த மண்ணை
கடைசியாக பார்க்கின்றோம்

ஆண் : விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்போமா

குழு : உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும்
ஊர்வலம் போகின்றோம்…ஓஹோ….

பெண் : எங்கள் சங்கீதம் பிள்ளையின்
அழுகையிலே தொலைத்தோம்
எங்கள் இளந்திங்கள் வெடி குண்டு
புகையிலே புதைத்தோம்

ஆண் : முன்னிரவில் மலரில் கிடந்தோம்
பின்னிரவில் முள்ளில் கிழிந்தோம்
கடல் நீர் பறவைகள்
இருந்தால் சந்திப்போம்
வானமே மலைகளே
வாழ்ந்தால் சந்திப்போம்
தலையில் கொஞ்சம் நெஞ்சில் அதிகம்
சுமைகள் சுமந்து போகின்றோம்

ஆண் : விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்போமா

குழு : உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும்
ஊர்வலம் போகின்றோம்…ஓஹோ…

Leave a Comment