Sollividu Sollividu Song Lyrics

in Kaaviya Thalaivan

பாடகர் : முகேஷ்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

ஆண் : சொல்லிவிடு சொல்லிவிடு சொல்லிவிடு
இறுதி தீர்ப்பை நீ சொல்லிவிடு
நின்றுவிடு நின்றுவிடு நின்றுவிடு
இப்போரில் இவ்விடம் நின்றுவிடு

ஆண் : சென்றுவிடு சென்றுவிடு சென்றுவிடு
இந்த யுத்தம் போதும் சென்றுவிடு
இன்னும் உயிர்கள் வேண்டும் என்றால் என்னை
முதலில் நீயே கொன்றுவிடு
கண்ணா என்னை முதலில் கொன்றுவிடு

ஆண் : ஏன் அம்பை எந்த வைத்தாய்
ஏன் குருதியில் நீந்த வைத்தாய்
ஏன் உலகத்தை ஜெயிக்க வைத்தாய்
ஏன் உள்ளுக்குள் தோற்க்கடித்தாய்

ஆண் : உலகத்தை வெல்ல வைத்தாய்
உள்ளுக்குள்ளே தோற்க்கடித்தாய்
காண்டீபன் கேட்கிறேன் கண்ணா
காண்டீபன் கேட்கிறேன்

ஆண் : சொல்லிவிடு சொல்லிவிடு சொல்லிவிடு
இறுதி தீர்ப்பை நீ சொல்லிவிடு
நின்றுவிடு நின்றுவிடு நின்றுவிடு
இப்போரில் இவ்விடம் நின்றுவிடு

ஆண் : ஆஆஆ… ஆஆஆ…..ஆஆஆ…
காலச்சக்கரம் உன் கையில்
அதில் சுற்றியதேனோ நான்
விதியும் சதியும் உன் கண்ணில்
அதில் சிக்கியதேனோ நான்

ஆண் : கர்ணனை கொன்ற பாவம்
கண்ணனுக்கு போகுமென்றால்
கண்ணனுக்கே பாவம் தந்த
பாவம் எங்கு போகும் ஐயோ

ஆண் : சொல்லிவிடு சொல்லிவிடு சொல்லிவிடு
இறுதி தீர்ப்பை நீ சொல்லிவிடு
நின்றுவிடு நின்றுவிடு நின்றுவிடு
இப்போரில் இவ்விடம் நின்றுவிடு

ஆண் : ஓ உலகமே… யுத்தம் எதற்கு
ஓ உயிர்களே….. ரத்தம் எதற்கு
ஓ இறைவனே…. துயரம் எதற்கு
ஓ இதயமே…. வன்மம் எதற்கு

ஆண் : கண்ணா தேரை நிறுத்து
எல்லாம் வீழ்த்தி எவருடன் வாழ
தேரை நிறுத்து….

ஆண் : போதும் இந்த குருதிக்குளியல்
போரை நிறுத்து
நாளை உலகம் நலம் பேரும் என்று
போரை நிறுத்து ….
போரை நிறுத்து….

Leave a Comment