Thalli Pogathey (Female Version) Song Lyrics

in Achcham Yenbadhu Madamaiyada

பாடகி : ரம்யா பிரியா சிவநாதன்

இசையமைப்பாளர் : தணிகை

ட்ரிபியூட் டு : எ.ஆர்.ஆர், ஜி.வி.எம் & தாமரை

பெண் : கண்ணை காரிருள்
சூழுதே கனவுகள் மூழ்குதே
எந்தன் நெஞ்சம் நோகுதே

பெண் : நாணம்ஏனோ
இன்று உன் முன் தோற்குதே
ஊன் எல்லாம் உயிரே நீ
தெரிகின்றாய்

பெண் : உளியை போல்
நீ என்னை கண்டாய் சிலை
ஆகும் பாறை நான்

பெண் : அசையும் விழிகள்
மழை துளி போலே மனதின்
உள்ளே பெய்வதினாலே
உருகிடும் பெண்மை

பெண் : வேண்டும்
ஸ்பரிசம் வேண்டாம்
மரணம் விழியே

பெண் : வழி தோறும்
முற்கல்லாய் வதைக்கின்றாய்
முடிவில் நீ என் மடி பூக்கிறாய்
பாவை நான் பாவம் தான்

பெண் : பிரியும் நேரம்
நெஞ்சில் பாரங்கள்
கண்ணுக்கு தெரியாத
தாபங்கள்

பெண் : ஓ உன் தோற்றம்
காணாமல் கண்ணில்
ஏக்கங்கள் நூறாகும்
தினமே

பெண் : உன் மூச்சு
பட்டாலே தீராத
காயங்கள் சீராகும்
மனமே

பெண் : உள்ளாசை
தள்ளாடும் உன் பாட்டு
தாலாட்டுமே தேயும் ஊன்
இங்கே தேவை நீ தானே
தேடினேன் நானே

பெண் : நான் மனம்
முடியாதொரு கைம்பெண்
ஆகிறேன் வெண்மையில்
வாழ்கிறேன் வானவில்
கேட்கிறேன்

பெண் : தள்ளி போகாதே
துணையே கண்ணில் கோபம்
கொள்ளாதே வயதின் பிழைகள்
உணர்ந்தேன் உன்னாலே

பெண் : தள்ளி போகாதே
துணையே தூரம் கொண்டு
கொல்லாதே மனதின் வலிகள்
மறைத்தாய் நீ தானே

பெண் : தினம் எதிர்
பார்ப்பேன் உன் வரவை
ஏன் வஞ்சம் தந்தாய் நீ

பெண் : கணம் தவறாமல்
என் விழிக்குள் ஏன் தஞ்சம்
கொண்டாய் நீ அமுதினை
தா ஆஆ ஆஆ அமுதினை
தா

பெண் : ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ

பெண் : தள்ளி போகாதே
துணையே கண்ணில்
கோபம் கொள்ளாதே
வயதின் பிழைகள்
உணர்ந்தேன் உன்னாலே

பெண் : தள்ளி போகாதே
துணையே தூரம் கொண்டு
கொல்லாதே மனதின்
வலிகள் மறைத்தாய்
நீ தானே

Leave a Comment