பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ம்ம்ம்….ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்.
ஆஹா…ஆஆ…..தாரா டு டு ரா ரா ரா
டா டா ரா ரி ரா
ஆண் : அழகில் அழகு தேவதை
ஆயிரம் பாவலர்
எழுதும் காவியம்
அழகில் அழகு தேவதை
ஆண் : கூந்தல் வண்ணம் மேகம் போல
குளிர்ந்து நின்றது
கொஞ்சுகின்ற செவிகள் இரண்டும்
கேள்வி ஆனது
ஆண் : பொன்முகம் தாமரை
பூக்களே கண்களோ
மன கண்கள் சொல்லும்
பொன்னோவியம்
அழகில் அழகு தேவதை
ஆண் : சிப்பி போல இதழ்கள் ரெண்டும்
மின்னுகின்றன
சேர்ந்த பல்லின் வரிசையாவும்
முல்லை போன்றன
ஆண் : மூங்கிலே தோள்களோ
தேன்குழல் விரல்களோ
ஒரு அங்கம் கைகள் அறியாதது
அழகில் அழகு தேவதை
ஆண் : பூ உலாவும் கொடியை போல
இடையை காண்கிறேன்
போக போக வாழை போல
அழகை காண்கிறேன்
ஆண் : மாவிலை பாதமோ
மங்கை நீ வேதமோ
இந்த மண்ணில்
இது போல் பெண் இல்லையே
ஆண் : அழகில் அழகு தேவதை
ஆயிரம் பாவலர்
எழுதும் காவியம்
அழகில் அழகு