பாடகி : எஸ். ஜானகி
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ
ஆஆ ஆஆ ஹா
ஆஆ ஆஆ ஹா
ஆண் : கிண்ணத்தில்
தேன் வடித்து கைகளில்
ஏந்துகிறேன் கிண்ணத்தில்
தேன் வடித்து கைகளில்
ஏந்துகிறேன்
ஆண் : எண்ணத்தில்
போதை வர எங்கெங்கோ
நீந்துகிறேன் கிண்ணத்தில்
தேன் வடித்து கைகளில்
ஏந்துகிறேன்
பெண் : ஆ ஆஆ
ஆஆ ஆஆ நானும்
ஓர் திராட்சை ரசம்
நாயகன் உந்தன் வசம்
நானும் ஓர் திராட்சை ரசம்
நாயகன் உந்தன் வசம்
பெண் : தென்றல் போல்
மன்றம் வரும் தேவி
நான் பூவின் இனம்
கொஞ்சமோ கொஞ்சும்
சுகம் கொண்டு போ
அந்தப்புரம்
பெண் : கன்னத்தில்
தேன் குடித்தால்
கற்பனை கோடி
வரும் உள்ளத்தில்
பூங்கவிதை வெள்ளம்
போல் ஓடி வரும்
பெண் : கன்னத்தில்
தேன் குடித்தால்
கற்பனை கோடி
வரும்
ஆண் : ஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆனிப்பொன்
கட்டில் உண்டு கட்டில் மேல்
மெத்தை உண்டு ஆனிப்பொன்
கட்டில் உண்டு கட்டில் மேல்
மெத்தை உண்டு
ஆண் : மெத்தை மேல்
வித்தை உண்டு
வித்தைக்கோர் தத்தை
உண்டு தத்தைக்கோர்
முத்தம் உண்டு முத்தங்கள்
நித்தம் உண்டு
ஆண் : கிண்ணத்தில்
தேன் வடித்து
கைகளில் ஏந்துகிறேன்
பெண் : ஆ ஆஆ ஆ
ஆஆஆஆ
ஆண் : ஆ ஆஆ ஆ
பெண் : யாழிசை தன்னில்
வரும் ஏழிசை எந்தன் மொழி
யாழிசை தன்னில் வரும்
ஏழிசை எந்தன் மொழி
ஆண் : விண்ணிலே
வட்டமிடும் வெண்ணிலா
உந்தன் விழி
பெண் : பள்ளியில் காலை
வரை பேசிடும் காதல் கதை
ஆண் : கிண்ணத்தில்
தேன் வடித்து கைகளில்
ஏந்துகிறேன் கன்னத்தில்
தேன் குடித்தால் கற்பனை
கோடி வரும்
ஆண் : கிண்ணத்தில்
தேன் வடித்து கைகளில்
ஏந்துகிறேன்
பெண் : ஆ ஆ
ஆண் : கைகளில் ஏந்துகிறேன்
பெண் : ஆ ஆ
ஆண் : கைகளில் ஏந்துகிறேன்