in Poovilangu
பாடகர் : இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட
குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
ஹே.. குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட..
ஆண் : அடி நாள் பார்த்து நான்
வந்தேன் வீம்பாக
உன் பாவாட
பூவில் நான் காம்பாக
காம்பாக வந்தேன் வீம்பாக
உன் வீட்டில் இந்நேரம்
ஆள் இல்லையே
ஓடாதே பெண்ணே
நான் தேள் இல்லையே
ஆண் : அடி செவ்வாழையே…. யே…….
உன் வீட்டுச் செவ்வாழை
என் கைகள் பட்டாலே
குலை ரெண்டு தள்ளாதோ
வா முல்லையே
ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட
குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
ஹே.. குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
ஆண் : மலர் மூடும் நிலை
கொஞ்சம் விலகாதோ
அடி நாள் எல்லாம் தவம் செய்தேன்
நழுவாதோ
நழுவாதோ வந்து தழுவாதோ
நீர் சொட்ட நின்றாலே
ஜலதோஷம் தான்
நீ இங்குப் போடாதே
பகல் வேஷம் தான்
ஆண் : இளம் பூஞ்சோலையே……
உன் பூமேனி நான் பார்க்கும்
கண்ணாடி ஆகாதோ
ஆனாலும் நீ ரொம்ப தாராளம் தான்
ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட
குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
ஹே.. குளிக்குது ரோசா நாத்து
ஹே..தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட