பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்
அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்
ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்
ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்
பெண் : அந்தி வரும் நேரம் வந்ததோரு ராகம்
பெண் : மந்திரங்கள் ஒலித்தது…
மங்கை உடல் சிலிர்த்தது…
சங்கமத்தின் சுகம் நினைத்து….
குழு : ஆஅ…..ஆஆ…..ஆஅ….
ஆண் : சிந்து கவி பிறந்தது…
சிந்தனைகள் பறந்தது
சந்தனத்து உடல் அணைத்து…
பெண் : இதழில் ஒரு ஒலை…
எழுதும் இந்த வேளை…
ஆண் : இளமை என்னும் சோலை…
முழுதும் இன்ப லீலை…ஹான்
பெண் : நீராடுது மாந்தளிர் தேகம்
போராடுது காதலின் வேகம்
என்றென்றும் ஆனந்த யோகம்
ஆண் : அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்
ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்
குழு : …………………………..
ஆண் : இன்பத்துக்கு முகவுரை
என்றுமில்லை முடிவுரை
நீயிருக்க ஏது குறை…
குழு : ஆஅ…..ஆஆ…..ஆஅ….
பெண் : பாதம் முதல் தலை வரை…
பார்த்து நின்ற தலைவனை.
பாட வந்தேன் நூறு முறை…
ஆண் : அணைத்தால் தேவ லோகம்…
அருகே வந்து சேரும்…
பெண் : நினைத்தால் இங்கு யாவும்
இனிமை என்று கூறும்…
ஆண் : ஆஹாஹ் இது மார்கழி மாதம்…
அம்மாடியோ முன்பனி வீசும்…
சூடேற்றும் பூ முல்லை வாசம்….
பெண் : அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்
ஆண் : ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்
இருவர் : ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்
குழு : ஆஅ…..ஆஆ…..ஆஅ….(2)