பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் உமா ரமணன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : வாலி
குழு : …………………….
ஆண் : அத்த மக ரத்தினமே
சிறு தக்காளித் தேன் பழமே
முத்து மணிச் சித்திரமே
பனி முத்தாடும் பூச்சரமே
மச்சானுக்கு கிக்கேறியே
மச்சானுக்கு கிக்கேறியே
வச்சா என்ன கச்சேரியே
ஆண் : அத்த மக ரத்தினமே
சிறு தக்காளித் தேன் பழமே…….
குழு : ……………………
பெண் : அந்த குருவாயூர் சந்தனமே
நானும் குழைத்துன்னை பூசணுமே……
திருவாரூர் நாயனமே
ஒன்ன தினம் தோறும் கேக்கணுமே…..
ஆண் : வாத்தியாரு சொல்லித் தந்தா
பாடம் ஒரு காலும் கேட்டுக்கணும்
புரியாம நீ முழிச்சா
அடி பெரம்பால வாங்கிக்கணும்….
பெண் : மச்சான் இந்த மஞ்சக் கிளி
கொஞ்சும் உங்க எண்ணப்படி
கிட்டே வந்து கையப் புடி
காட்டும் இது பச்சக் கொடி
ஆண் : அன்னாடம் நான் வாடுறேன்
உம் பேரத்தான் பாடுறேன்
ஆண் : அத்த மக ரத்தினமே
பெண் : அத்தான் ஒரு குத்தாலமே
எப்போ மத்தாள ஊர்வலமே
முத்து மணிச் சித்திரமே
பனி முத்தாடும் பூச்சரமே
பெண் : என்னென்னமோ சொல்லுறியே
என்னென்னமோ சொல்லுறியே
எம் மனச கிள்ளுறியே
அத்தான் ஒரு குத்தாலமே
எப்போ மத்தாள ஊர்வலமே
குழு : ……………………
ஆண் : அந்த சிவகாசி வாணங்கள
கள்ள சிரிப்பால காட்டுறியே
மகராசி நீ சிரிச்சு நெஞ்ச
மணி போல ஆட்டுறியே
பெண் : குழியாதோ நீ சிரிச்சா தேனில்
குளிப்பேனே நீ அணைச்சா
விடுவேனோ நீ கெடச்சா வந்து
விளையாடு நான் அழைச்சா
ஆண் : நெஞ்சுக்குள்ள பூ வாணமே
நீதான் ஒரு வத்திக் குச்சி
ஒன்ன நெஞ்சில் வச்சு வச்சு
உள்ள இப்போ பத்திக்கிச்சு
பெண் : அன்னாடம் நான் வாடுறேன்
உம் பேரத்தான் பாடுறேன்
அத்தான் ஒரு குத்தாலமே…………
ஆண் : அத்த மக ரத்தினமே
சிறு தக்காளித் தேன் பழமே
பெண் : அத்தான் ஒரு குத்தாலமே
எப்போ மத்தாள ஊர்வலமே
ஆண் : மச்சானுக்கு கிக்கேறியே
பெண் : என்னென்னமோ சொல்லுறியே
எம் மனச கிள்ளுறியே
ஆண் : அத்த மக ரத்தினமே
சிறு தக்காளித் தேன் பழமே ஹேஹேய் ஹேய்