பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் சசிரேகா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : என் புருஷன்தான்…..
எனக்கு மட்டும்தான்…….
பெண் : என் புருஷன்தான்…..
எனக்கு மட்டும்தான்…….
சொந்தந்தான் என்று நான் நெனச்சேனே
அந்த நெனப்ப மட்டும் எனக்கு விட்டு
மனக் கதவத்தான் சாத்திவிட்டு போனானே
பெண் : என் புருஷன்தான்…..
எனக்கு மட்டும்தான்…….
சொந்தந்தான் என்று நான் நெனச்சேனே
பெண் : வானத்தைப் பாத்து பாத்து
ஏங்கும் பூமி
மேகத்த கொஞ்சம் கூட காணோம் சாமி
வானத்தைப் பாத்து பாத்து
ஏங்கும் பூமி
மேகத்த கொஞ்சம் கூட காணோம் சாமி
பெண் : வெயிலில காஞ்சு காஞ்சு
வயலும் வறண்டு போனா
பயிரும் கருகாதோ………
அழகான ராசாவும் ஆசையுள்ள ரோசாவ
விட்டு விட்டுப் போனானே…….
பெண் : ஒன் புருஷன்தான்
உனக்கு மட்டும்தான்
சொந்தந்தான் அத நீ மறக்காதே
ஒன் மனக் கதவ திறந்து வச்சு
காத்திருந்தாலே
மன்னவனும் வருவாரே…….
பெண் : பூவான நெஞ்சுக்குள்ளே
வாட்டம் ஏன்டி
பொல்லாங்கு செய்வோரெல்லாம்
ஆண்கள்தான்டி
பெண் : பூவான நெஞ்சுக்குள்ளே
வாட்டம் ஏன்டி
பொல்லாங்கு செய்வோரெல்லாம்
ஆண்கள்தான்டி
பெண் : பெண் பாவம் பொல்லாது
அவன் காலம் நில்லாது
காண்பாய் இதை நீயே
உன் ஆசை கண்ணாளன்
யார் என்று நீ சொன்னால்
கொண்டு வந்து சேர்ப்பேனே…………
பெண் : என் புருஷன்தான்…..
எனக்கு மட்டும்தான்…….
சொந்தந்தான் என்று நான் நெனச்சேனே
அந்த நெனப்ப மட்டும் எனக்கு விட்டு
மனக் கதவத்தான் சாத்திவிட்டு போனானே