En Purushanthan Song Lyrics

in Gopurangal Saivathillai

பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் சசிரேகா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : என் புருஷன்தான்…..
எனக்கு மட்டும்தான்…….

பெண் : என் புருஷன்தான்…..
எனக்கு மட்டும்தான்…….
சொந்தந்தான் என்று நான் நெனச்சேனே
அந்த நெனப்ப மட்டும் எனக்கு விட்டு
மனக் கதவத்தான் சாத்திவிட்டு போனானே

பெண் : என் புருஷன்தான்…..
எனக்கு மட்டும்தான்…….
சொந்தந்தான் என்று நான் நெனச்சேனே

பெண் : வானத்தைப் பாத்து பாத்து
ஏங்கும் பூமி
மேகத்த கொஞ்சம் கூட காணோம் சாமி
வானத்தைப் பாத்து பாத்து
ஏங்கும் பூமி
மேகத்த கொஞ்சம் கூட காணோம் சாமி

பெண் : வெயிலில காஞ்சு காஞ்சு
வயலும் வறண்டு போனா
பயிரும் கருகாதோ………
அழகான ராசாவும் ஆசையுள்ள ரோசாவ
விட்டு விட்டுப் போனானே…….

பெண் : ஒன் புருஷன்தான்
உனக்கு மட்டும்தான்
சொந்தந்தான் அத நீ மறக்காதே
ஒன் மனக் கதவ திறந்து வச்சு
காத்திருந்தாலே
மன்னவனும் வருவாரே…….

பெண் : பூவான நெஞ்சுக்குள்ளே
வாட்டம் ஏன்டி
பொல்லாங்கு செய்வோரெல்லாம்
ஆண்கள்தான்டி

பெண் : பூவான நெஞ்சுக்குள்ளே
வாட்டம் ஏன்டி
பொல்லாங்கு செய்வோரெல்லாம்
ஆண்கள்தான்டி

பெண் : பெண் பாவம் பொல்லாது
அவன் காலம் நில்லாது
காண்பாய் இதை நீயே
உன் ஆசை கண்ணாளன்
யார் என்று நீ சொன்னால்
கொண்டு வந்து சேர்ப்பேனே…………

பெண் : என் புருஷன்தான்…..
எனக்கு மட்டும்தான்…….
சொந்தந்தான் என்று நான் நெனச்சேனே
அந்த நெனப்ப மட்டும் எனக்கு விட்டு
மனக் கதவத்தான் சாத்திவிட்டு போனானே

Leave a Comment