Idhayam Idam Mariyathe Song Lyrics

in Jodhaa Akbar

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : இதயம் இடம்
மாறியதே விழிகள்
வழி மாறியதே இதுதானே
காதல் என்று அசரீரி
கேட்கின்றதே

ஆண் : இந்த பூமி
முழுவதும் அழகாய்
மாறி போனதேனோ
என் வானின் மீது புதிதாய்
ஒரு மேகம் மிதப்பதேனோ

ஆண் : மனமே மனமே
எதனால் இத்தனை உற்சாகம்
உனக்குள்ளே புது வித தடுமாற்றம்
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ

ஆண் : ஓஹோ மனமே
மனமே எதனால் இத்தனை
கொண்டாட்டம் கண்ணுக்குள்
கனவுகள் குடியேற்றம் உனக்கென்ன
நடந்தது சொல்வாயோ

குழு : …………………………..

ஆண் : சென் சூரியன்
ஜோதியில் சந்திரன்
ஒளி சேர்ந்ததோ
அசைந்தாடும் ஆழியில்
அழகிய நதி கலந்ததோ

குழு : சென் சூரியன்
ஜோதியில் சந்திரன்
ஒளி சேர்ந்ததோ
அசைந்தாடும் ஆழியில்
அழகிய நதி கலந்ததோ

குழு : காலம் என்னும்
நதியில் விழுந்து இரவும்
நகர்ந்தது பகலும் நகர்ந்தது
இதயம் நகர்ந்தது ஓ

ஆண் : இதயம் இடம்
மாறியதே விழிகள்
வழி மாறியதே இதுதானே
காதல் என்று அசரீரி
கேட்கின்றதே

பெண் : ஹ்ம்ம் அலைபாயும்
காதலே அணையாத தீயா
வலித்தாலும் காதலே
இனிக்கின்ற நோயா

பெண் : இசையோடு
சேரும் தாளம் சுதியோடு
பாடும் ராகம் அதைப்போல
எந்தன் நெஞ்சம் உன்னை
சேர்ந்ததே

பெண் : உள்ளம் சாய்ந்ததே
காதலின் கால்தடம் தந்ததும்
தீயா தந்ததும் தீயா தீயை
தொட்டு ரசித்தால் வந்ததும்
நீயா

ஆண் : ஹ்ம்ம் எந்தன்
கனவில் பூந்தோட்டம்
பூக்கள் பூக்கும் பெண்ணே
உன்னாலே பூவின் வண்ணம்
மட்டும் என் சொந்தம் பூவின்
வாசம் எல்லாமே உன் சொந்தமே

குழு : { புது யுகமே பிறந்ததோ
பரிமாற்றம் நிகழ்ந்ததோ இரு
துருவம் இணைந்ததோ இரு
விழிகள் தொலைந்ததோ } (2)

குழு : காலம் என்னும்
நதியில் விழுந்து இரவும்
நகர்ந்தது பகலும் நகர்ந்தது
இதயம் நகர்ந்தது ஓ

ஆண் : இதயம் இடம்
மாறியதே விழிகள்
வழி மாறியதே இதுதானே
காதல் என்று அசரீரி
கேட்கின்றதே

ஆண் : மனமே மனமே
எதனால் இத்தனை உற்சாகம்
உனக்குள்ளே புது வித தடுமாற்றம்
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ

Leave a Comment