பாடகி : சின்மயி
பாடகர் : ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
பெண் : செந்தீ விழுந்த
செம்பொற் பாறையில்
மந்தி உருட்டும் மயிலின்
முட்டையாய் …
பெண் : நல்ல மரத்தின்
நறுங்கிளை எழிந்து
வெள்ளச் சுழியில்
விழுந்து மலராய்
பெண் : இதயம் நழுவி
நழுவி நகர்ந்து நகர்ந்து
நகர்ந்து போகுதே ஏனோ
சொல் ஏனோ ஏனோ சொல்
சொல் ஏனோ சொல்வாயோ
ஏனோ சொல் சொல் ஏனோ
சொல்வாயோ
பெண் : இதயம்
கரைகள் மறந்து
திசைகள் தொலைந்து
போகுதே ஏனோ
சொல் ஏனோ ஏனோ
சொல் சொல் ஏனோ
சொல்வாயோ
ஆண் : { பூப்பது மறந்தன
கொடிகள் புன்னகை மறந்தது
மின்னல் காய்ப்பது மறந்தது
காடு காவியம் மறந்தது ஏடு } (2)
பெண் : ஏனோ
ராணா ராணா
ஆண் : யானோ நின்னை
மறக்கினேன் நின்னை
மறக்கினேன் நின்னை
மறக்கினேன்
பெண் : ஆஆ ஆஆ ஆ
ஆ ஆஆ ஆ ஆஆ ஆஆ
ஆ ஆ ஆஆ ஆ ஆஆ ஆஆ
ஆ ஆ ஆஆ ஆ
பெண் : இதயம் நழுவி
நழுவி நகர்ந்து நகர்ந்து
நகர்ந்து போகுதே ஏனோ
சொல் ஏனோ ஏனோ சொல்
சொல் ஏனோ சொல்வாயோ
ஏனோ சொல் சொல் ஏனோ
சொல்வாயோ
ஆண் : { செந்தமிழ் பிரியும்
சங்கம் செங்கடல் பிரியும்
அலைகள் ஒலியைப் பிரியும்
காற்று உளியைப் பிரியும்
சிற்பம் } (2)
பெண் : வாசத்துக்கேது
சிறைவாசம்
ஆண் : யானோ நின்னைப்
பிரிகினேன் பிரிகினேன்
பிரிகினேன் யானோ நின்னைப்
பிரிகினேன் பிரிகினேன்
பிரிகினேன்
பெண் : சிறைகோட்டு
பெரும்பயம் தூங்கி யாங்கு
என் உயிரோ சிறிதே
காதலோ பெரிதே