தமிழ்
பாடகர் : இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : காலம் எனும் நூலிலே……ஏ…..ஏ…..
இங்கு பேசும் பொம்மைகள் ஆடுது ஆ…ஆ…..
பாவம் ரெண்டு பொம்மையும் விடும்
கண்ணீர் கன்னத்தில் ஓடுது
ஆ…ஆ….ஆ….ஆ…ஆஅ…..ஆ……ஆ…..
ஆண் : அம்மா எனும் வார்த்தைதான்
பல அர்த்தம் சொல்கிற வாக்கியம்
எல்லோர்க்கும் வாய்க்குமா
அதை காதால் கேட்கிற பாக்கியம்
தேவன் தரும் தாய்மைதான்
வேண்டாம் எனும் பெண்மைதான்
விந்தையானதே……ஏ…..
ஆண் : அம்மா எனும் வார்த்தைதான்
பல அர்த்தம் சொல்கிற வாக்கியம்
எல்லோர்க்கும் வாய்க்குமா
அதை காதால் கேட்கிற பாக்கியம்
ஆண் : கன்றுகளை ஈன்றெடுக்க
ஆடும் மாடும் அஞ்சுதா
கர்ப்பத்தடை வேண்டும் என்று
தெய்வத்திடம் கெஞ்சுதா
பிள்ளை ஒன்று வேண்டும் என்று
எத்தனையோ தாய்குலம்
கோயில் குளம் சாமியென்று
சுற்றி வந்து வேண்டிடும்
ஆண் : சுற்றி வந்த போதிலும்
பெற்றெடுக்க கூடுமோ
முக்குளிக்கும் யாருமே
முத்தெடுக்க ஆகுமோ
பெண்ணை ஒரு தெய்வமாய்
பேசுகின்ற காரணம்
அவள் தாங்கும் தாய்மைதான்………
ஆண் : அம்மா எனும் வார்த்தைதான்
பல அர்த்தம் சொல்கிற வாக்கியம்
எல்லோர்க்கும் வாய்க்குமா
அதை காதால் கேட்கிற பாக்கியம்
தேவன் தரும் தாய்மைதான்
வேண்டாம் எனும் பெண்மைதான்
விந்தையானதே……ஏ…..
ஆண் : அம்மா எனும் வார்த்தைதான்
பல அர்த்தம் சொல்கிற வாக்கியம்
எல்லோர்க்கும் வாய்க்குமா
அதை காதால் கேட்கிற பாக்கியம்
ஆண் : ஐயிரண்டு மாதம் என்று
அன்னை படும் வேதனை
கையிரண்டில் தேனை அள்ளி கொண்டு
வரும் சாதனை
சோறும் இன்றி நீருமின்றி
சாம்பல் தின்ன தோன்றலாம்
தித்திக்கின்ற முத்தங்களை
பிள்ளையிடம் வாங்கலாம்
ஆண் : பச்சை வண்ண தார்விடும்
வாழைமரம் சாய்ந்திடும்
முத்துக்களை ஈன்றிடும்
சிப்பிக்களும் மாய்ந்திடும்
பிள்ளைகளை தாங்கிடும்
பெண்மை உயிர் வாழ்ந்திடும்
இது தேவன் தீர்ப்பு………
ஆண் : அம்மா எனும் வார்த்தைதான்
பல அர்த்தம் சொல்கிற வாக்கியம்
எல்லோர்க்கும் வாய்க்குமா
அதை காதால் கேட்கிற பாக்கியம்
தேவன் தரும் தாய்மைதான்
வேண்டாம் எனும் பெண்மைதான்
விந்தையானதே……ஏ…..
ஆண் : அம்மா எனும் வார்த்தைதான்
பல அர்த்தம் சொல்கிற வாக்கியம்
எல்லோர்க்கும் வாய்க்குமா
அதை காதால் கேட்கிற பாக்கியம்