பாடகி : லதா ரஜினிகாந்த்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ
பெண் : கடவுள் உள்ளமே
ஓர் கருணை இல்லமே
குழு : கடவுள் உள்ளமே
ஓர் கருணை இல்லமே
பெண் : தந்தை இல்லை
தாயும் இல்லை தெய்வமன்றி
யாரும் இல்லை
குழு : தந்தை இல்லை
தாயும் இல்லை தெய்வமன்றி
யாரும் இல்லை கடவுள் உள்ளமே
ஓர் கருணை இல்லமே
பெண் : சின்ன சின்ன
பூக்கள் சிந்திய வேளை
அன்பு என்னும் நூலில்
ஆக்கிய மாலை பாதம்
செல்லும் பாதை காட்டிடும்
தலைவா என் தலைவா
குழு : ஊனம் உள்ள பேரை
காத்திடும் இறைவா என்
இறைவா
பெண் : ஜீவன் யாவும்
ஒன்று இங்கு யாரும்
சொந்தமே
குழு : ஜீவன் யாவும்
ஒன்று இங்கு யாரும்
சொந்தமே
பெண் : இது தான் இயற்கை
தந்த பாசபந்தமே
குழு : { கடவுள் உள்ளமே
ஓர் கருணை இல்லமே } (2)
பெண் : கண் இழந்த பிள்ளை
காணும் உண்மை கண் இருக்கும்
பேர்கள் கண்டது இல்லை
ஊருக்கொரு வானம் இல்லையே
இறைவா உன் படைப்பில்
குழு : ஆளுக்கொரு ஜாதியில்லையே
அது போல் உயிர் பிறப்பில்
பெண் : உண்ணும் உணவும்
நீரும் தினம் தந்த தெய்வமே
குழு : உண்ணும் உணவும்
நீரும் தினம் தந்த தெய்வமே
பெண் : என்றும் உமக்கே
நாம் நன்றி சொல்லுவோம்
குழு : { கடவுள் உள்ளமே
ஓர் கருணை இல்லமே } (2)
அடைக்கலம் கொடுத்தவன்
அருளை பாடுவோம் தந்தை
இல்லை தாயும் இல்லை
தெய்வம் அன்றி யாரும் இல்லை
குழு : கடவுள் உள்ளமே
ஓர் கருணை இல்லமே