Kannodu Kannana Song Lyrics

in Sippikkul Muthu

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கண்ணோடு கண்ணான
என் கண்ணா
உன்னை எவரடித்தார் கண்ணா

ஆண் : கண்ணோடு கண்ணான
என் கண்ணா
உன்னை எவரடித்தார் கண்ணா
கண்ணோடு கண்ணான என் கண்ணா
உன்னை எவரடித்தார் கண்ணா

ஆண் : அன்னை உன்னை
அடித்தாளோ சாமி
பிஞ்சு நெஞ்சு வலிக்காதோ சாமி
அன்னையும் நான் தானே
உன் அப்பனும் நான் தானே

ஆண் : கண்ணோடு கண்ணான
என் கண்ணா
உன்னை எவரடித்தார் கண்ணா
கண்ணோடு கண்ணான
என் கண்ணா
உன்னை யாரடித்தார்..அப்பா

ஆண் : நல்ல தாயின் கண்ணிரண்டில்
கோபம் வந்த மாயமென்ன
பாசம் நெஞ்சில் இருந்தாலும்
நடிப்பதில் லாபமென்ன

ஆண் : வெண்ணையைக் கண்ணன் போல்
திருடி விட்டாயோ
வீதியின் மண்ணெல்லாம்
தின்றுவிட்டாயோ
அம்மா.. மண்ணைத் திங்க
நான் சிறுவனோ
மாயவனோ…கிறுக்கனோ..
நீயே பாரு ஆ…

ஆண் : வெறுப்பது அம்மா தான்..
ஆ..ஆ..ஆ..ஆ..
வெறுப்பது அம்மா தான்
விட்டு விட்டுப் போகாதே
கோழி ஒண்ணு குஞ்சை மிதிச்சா
சேதங்கள் வாராதே
ஹா..ஹஹ்ஹஹ..ஹா..ஹஹ்ஹஹ..
அழுகை வராதோ
எனக்கு அழுகை வராதோ
ஊர விட்டுப் போனாலும்
போக ஒரு ஊரில்லை ஹா
சொந்தம் பந்தம் பாத்தாலும்
சோறு தர ஆளில்லை

ஆண் : பக்கத்துல அவ இருந்தா
பசியே எடுக்காது
கோபத்துல அடிச்சாலும்
கொஞ்சமும் வலிக்காது
போடம்மா போடு நல்லாப் போடு
இன்னும் போடு போடு

ஆண் : கண்ணோடு கண்ணான
என் கண்ணா
உன்னை எவரடித்தார் கண்ணா
கண்ணோடு கண்ணான
என் கண்ணா
உன்னை எவரடித்தார் கண்ணா

பெண் : சின்னப் பையன் நீயல்ல
அள்ளி வைத்துத் தாலாட்ட
பெரிய பையன் நீயல்ல
புத்திமதி நான் சொல்ல
அனாதையாய் வாழ்ந்தது
அடடா அன்று
இப்போது நான் கொண்டது
பிள்ளைகள் ரெண்டு

பெண் : சொந்தம் என்பது……
சொந்தம் என்பது தொடர்கதை ஆனது
பந்தம் என்பது விடுகதை ஆனது
வாழ்வே விடுகதை ஆனது

ஆண் : ஆ..என்னம்மா மனசுக்குள் பாரமா

பெண் : கண்ணோடு கண்ணான
என் கண்ணா
உன்னை எவரடித்தார் கண்ணா
கண்ணோடு கண்ணான
என் கண்ணா
உன்னை எவரடித்தார் கண்ணா

சிறுவன் : அன்னை என்னை
அடித்தாளே சாமி ஸ்..ஆஹா
பிஞ்சு நெஞ்சு வலிக்காதோ சாமி..

ஆண் : அன்னையும் நான் தானே
சிறுவன் : அய்யோ நீ ஆம்பளை
ஆண் : உன் அப்பனும் நான் தானே

ஆண் : ………………………..
பெண் : கண்ணோடு கண்ணான
என் கண்ணா
உன்னை எவரடித்தார் கண்ணா
கண்ணோடு கண்ணான
என் கண்ணா
உன்னை எவரடித்தார் கண்ணா

Leave a Comment