Karma Veeran Song Lyrics

in Kochadaiiyaan

பாடகி : எ.ஆர். ரெய்ஹானா

பாடகர் : எ.ஆர். ரஹ்மான்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : ஆகாய மேகங்கள்
பொழியும்போது ஆகாயம்
கேளாது தாய்நாடு காக்கின்ற
உள்ளம் என்றும் தனக்காக
வாழாது தனக்காக வாழாது

ஆண் : ஹே வீரனே
கர்ம வீரனே கடமை
வீரனே கர்ம வீரனே

குழு : ஓஹோ ஓ
ஆ ஓஹோ

ஆண் : தோல்விகளாலே
துவண்டுவிடாதே வெற்றி
களாலே வெறிகொள்ளாதே
கல்லடி படும் என்பதாலே
மரம் காய்க்காமல்
போவதில்லை

ஆண் : மாலைகளை
கண்டு மயங்காதே
மலைகளை கண்டு
கலங்காதே சொல்லடி
படும் என்பதாலே வெற்றி
காணாமல் போவதில்லை

குழு : காற்றே காற்றே
நீ தூங்குவதே இல்லை
கர்ம வீரனே வீரனே நீ
ஓய்வதே இல்லை

குழு : வாழ்வே வாழ்வே
நீ தீருவதே இல்லை இந்த
வாழ்விலே சத்தியம்
தோற்பதே இல்லை

ஆண் : நின்ற இடத்தில்
நிற்க வேண்டுமா நீ
ஓடிக்கொண்டே இரு
நிம்மதி வாழ்வில்
வேண்டுமா நீ
பாடிக்கொண்டே இரு

பெண் : ஆகாய மேகங்கள்
பொழியும்போது ஆகாயம்
கேளாது தாய்நாடு காக்கின்ற
உள்ளம் என்றும் தனக்காக
வாழாது தனக்காக வாழாது
தனக்காக வாழாது

குழு : காற்றே காற்றே
நீ தூங்குவதே இல்லை
கர்ம வீரனே வீரனே நீ
ஓய்வதே இல்லை

குழு : வாழ்வே வாழ்வே
நீ தீருவதே இல்லை இந்த
வாழ்விலே சத்தியம்
தோற்பதே இல்லை

ஆண் : கோழைகள்
மன்னித்தால் அது
பெரிதல்ல பெரிதல்ல
வீரர்கள் மன்னித்தால்
அது வரலாறு வரலாறு

குழு : { காற்றே காற்றே
நீ தூங்குவதே இல்லை
கர்ம வீரனே வீரனே நீ
ஓய்வதே இல்லை

குழு : வாழ்வே வாழ்வே
நீ தீருவதே இல்லை இந்த
வாழ்விலே சத்தியம்
தோற்பதே இல்லை } (2)

ஆண் : பொன்னும்
மண்ணும் வென்று
முடிப்பவன் கடமை
வீரனே அந்த பொன்னை
ஒருநாள் மண்ணாய்
பார்ப்பவன் கர்ம வீரனே
கர்ம வீரனே

பெண் : ஆகாய மேகங்கள்
பொழியும்போது ஆகாயம்
கேளாது தாய்நாடு காக்கின்ற
உள்ளம் என்றும் தனக்காக
வாழாது தனக்காக வாழாது
தனக்காக வாழாது

Leave a Comment