Maama Yemmaa Song Lyrics

in Thambi Durai

பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : மாமா…….
ஆண் : ஏம்மா…..
பெண் : ஒத்தாச செஞ்சா என்ன மாமா
பெண் : மாமா…
ஆண் : அட ஏம்மா….
பெண் : ஒட்டாம எட்டி நிக்கலாமா
சோறாக்கும் நேரம் சும்மாவே நீயும்
சொகுசாக இங்கே நின்னாலே பாவம்

பெண் : மாமா…….
ஆண் : ஏம்மா…..
பெண் : ஒத்தாச செஞ்சா என்ன மாமா
சமையலுக்கு
ஒத்தாச செஞ்சா என்ன மாமா

ஆண் : வேண்டாமே இங்கே இப்போ
இந்தச் சாப்பாடு…..
ஆத்தாடி உள்ளே பாரு
தாத்தா ஏற்பாடு…..

ஆண் : பூவாலே கட்டில் மெத்தை
எல்லாம் போட்டாச்சு….
வா வா நாம் கொஞ்சப் போவோம்
ரொம்ப லேட் ஆச்சு….

பெண் : அன்னாடம் என்ன கரை சேத்த மாமா
இந்நாளில் நீயே அலை பாயலாமா
வாடாம கொஞ்சம் நில்லு நான் வாரேன்
நீ கேக்காம உள்ளதெல்லாம்
நான் தாரேன் மாமா

பெண் : மாமா…….
ஆண் : ஏம்மா…..
பெண் : ஒத்தாச செஞ்சா என்ன மாமா
பெண் : மாமா…..
ஆண் : அட ஏம்மா……
பெண் : ஒட்டாம எட்டி நிக்கலாமா
சோறாக்கும் நேரம் சும்மாவே நீயும்
சொகுசாக இங்கே நின்னாலே பாவம்

பெண் : மாமா…….
ஆண் : ஏம்மா…..
பெண் : ஒத்தாச செஞ்சா என்ன மாமா
சமையலுக்கு
ஒத்தாச செஞ்சா என்ன மாமா

பெண் : பூங்காத்தும் வெண்ணிலவும்
ரொம்ப சூடாச்சா…..
பொல்லாத மோகம் வந்து
படுத்தும் பாடாச்சா…..

பெண் : நீ கொஞ்சம் காத்திருக்க
உன்னால் ஆகாதா….
நேரம்தான் ஆனா என்ன
சொந்தம் கூடாதா….

ஆண் : அஞ்சாறு பாணம்
விடுறானே காமன்
தள்ளாடி நின்னா தடுமாறும் மாமன்
ராப்போது கண்ணு ரெண்டும் தூங்காது
நீ ராகத்தை மெல்லப்பாடு நீங்காது……

ஆண் : வாம்மா……
பெண் : மாமா…
ஆண் : என்னோடு வம்பு பண்ணலாமா
ஏம்மா……
பெண் : மாமா…..
ஆண் : இப்போது சோறு பொங்கலாமா
பொன்மானே பூவே ஒண்ணாகச் சேரு
நீதான்டி இங்கே எனக்கான சோறு

ஆண் : வாம்மா
பெண் : மாமா…
ஆண் : என்னோடு வம்பு பண்ணலாமா
அடடாடா
என்னோடு வம்பு பண்ணலாமா…..ஆஅ….

Leave a Comment