Nenjukulle Song Lyrics

in Kadal

பாடகர்கள் : ஷக்திஸ்ரீ  கோபாலன் மற்றும் ஏ. ஆர். ரஹ்மான்

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

பெண் : நெஞ்சுக்குள்ள
உம்ம முடிஞ்சிருக்கேன்

பெண் : நெஞ்சுக்குள்ள
உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில்
எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ
வெள்ளை பார்வை
வீசிவிட்டீர் முன்னாடி
இத தாங்காத மனசு
தண்ணி பட்ட கண்ணாடி

பெண் : வண்ண மணியாரம்
வலதுகை கெடியாரம்
ஆனை புலியெல்லாம்
அடக்கும் அதிகாரம்

பெண் : நீர் போன பின்னும்
நிழல் மட்டும் போகலயே போகலயே
நெஞ்சுகுழியில் நிழல் வந்து
விழுந்துருச்சு

பெண் : அப்ப நிமிந்தவ தான்
அப்பறமா குனியலையே குனியலையே
கொடக்கம்பி போல மனம்
குத்தி நிக்குதே

பெண் : நெஞ்சுக்குள்ள
உம்ம முடிஞ்சிருக்கேன்

பெண் : நெஞ்சுக்குள்ள
உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில்
எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ

பெண் : பச்சி ஒறங்கிருச்சு
பால் தயிரா தூங்கிருச்சு
இச்சி மரத்து மேல
எல கூட தூங்கிருச்சு

பெண் : காச நோய்க்காரிகளும்
கண்ணுறங்கும் வேளையில
ஆச நோய் வந்தமக
அரைநிமிசம் தூங்கலையே…ஏ…ஏ…ஏ…

பெண் : நெஞ்சுக்குள்ள
உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில்
எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ

பெண் : ஒரு வாய் எறங்கலையே
உள் நாக்கு நனையலையே
ஏழெட்டு நாளா
எச்சில் முழுங்கலையே

பெண் : ஏலே இளஞ்சிறுக்கி
ஏதோ சொல்ல முடியலையே
ரப்பர் வளவிக்கெல்லாம்
சத்தமிட வாயில்லையே

பெண் : ஓ நெஞ்சுக்குள்ள
உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில்
எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ
வெள்ளை பார்வை
வீசிவிட்டீர் முன்னாடி
இத தாங்காத மனசு
தண்ணி பட்ட கண்ணாடி

பெண் : வண்ண மணியாரம்
வலதுகை கெடியாரம்
ஆனை புலியெல்லாம்
அடக்கும் அதிகாரம்

பெண் : நீர் போன பின்னும்
நிழல் மட்டும் போகலயே போகலயே
நெஞ்சுகுழியில் நிழல் வந்து
விழுந்துருச்சு

பெண் : அப்ப நிமிந்தவ தான்
அப்பறமா குனியலையே குனியலையே
கொடக்கம்பி போல மனம்
குத்தி நிக்குதே

பெண் : நெஞ்சுக்குள்ள
உம்ம முடிஞ்சிருக்கேன்

பெண் : நெஞ்சுக்குள்ள
உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில்
எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ

Leave a Comment