Niththam Niththam Song Lyrics

in Mullum Malarum

பாடகி : வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : நித்தம் நித்தம் நெல்லு சோறு
நெய் மணக்கும் கத்திரிக்கா
நித்தம் நித்தம் நெல்லு சோறு
நெய் மணக்கும் கத்திரிக்கா
நேத்து வெச்ச மீன் கொழம்பு
என்ன இழுக்குதைய்யா
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு
வந்து மயக்குதைய்யா

பெண் : பச்சரிசி சோறு..ம்ம் ..
உப்பு கருவாடு
சின்னமனூரு வாய்க்கா
சேலு கெண்ட மீனு
குருத்தான மொளை கீரை
வாடாத சிறு கீரை
நெனைக்கையிலே எனக்கு இப்போ
எச்சி ஊறுது
அள்ளி தின்ன ஆசை வந்து
என்னை மீறுது

பெண் : நித்தம் நித்தம் நெல்லு சோறு
நெய் மணக்கும் கத்திரிக்கா
நேத்து வெச்ச மீன் கொழம்பு
என்ன இழுக்குதைய்யா
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு
வந்து மயக்குதைய்யா

பெண் : பாவக்கா கூட்டு
பருப்போட சேத்து
பக்குவத்த பாத்து
ஆக்கி முடிச்சாச்சு
சிறுகாலான் வருத்தாச்சு
பதம் பாத்து எடுத்தாச்சு
கேழ்வெரகு கூழுக்கது
ரொம்ப பொருத்தமைய்யா
தெனங்குடிச்சா ஒடம்பு இது
ரொம்ப பெறுக்குமைய்யா

பெண் : நித்தம் நித்தம் நெல்லு சோறு
நெய் மணக்கும் கத்திரிக்கா
நேத்து வெச்ச மீன் கொழம்பு
என்ன இழுக்குதைய்யா
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு
வந்து மயக்குதைய்யா

பெண் : பழையதுக்கு தோதா
புளிச்சி இருக்கும் மோறு
பொட்டுகள்ள தேங்கா
போட்டறச்ச தொவயலு
சாம்பாரு வெங்காயம்
சலிக்காது தின்னாலும்
அதுக்கு இணை ஒலகத்துல
இல்லவே இல்ல
அள்ளி தின்னேன் எனக்கு இன்னும்
அலுக்கவே இல்ல

பெண் : இத்தனைக்கும் மேலிருக்கு
நெஞ்சுக்குள்ளே ஆச ஒன்னு
சூசகமா சொல்ல போறேன்
பொம்பள தாங்க
சூடாக இருக்குறப்போ சாப்பிட வாங்க

Leave a Comment