in Guru
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : { பேரைச் சொல்லவா
அது நியாயமாகுமா } (2)
பெண் : நான் பாடும் ஸ்ரீராகம்
எந் நாளுமே நீயல்லவா
என் கண்ணனே என்
மன்னவா
ஆண் : { தங்க மாங்கனி
என் தர்ம தேவதை } (2)
ஆண் : நான் பாடும் ஸ்ரீராகம்
எந் நாளுமே நீயல்லவா
என் பூங்கொடி விடை
சொல்லவா
பெண் : பேரைச் சொல்லவா
அது நியாயமாகுமா
ஆண் : இடையொரு கொடி
இதழொரு கனி இன்ப லோகமே
உன் கண்கள் தானடி
பெண் : மலரெனும் முகம்
அலைவது சுகம் ஒன்று
போதுமே இனி உங்கள்
தேன்மொழி
ஆண் : நான் தேடினேன்
பூந்தோட்டமே வந்தது
பெண் : நான் கேட்டது
அருகே நின்றது
ஆண் : இனிமேல்
பறக்கட்டும் பறவைகள்
இரண்டும்
பெண் : பேரைச் சொல்லவா
அது நியாயமாகுமா
ஆண் : பா பா ப ப பா
ப ப ப பா பா
பெண் : புது மழையிது
சுவை தரும் மது
வல்ல பூச்சரம் அது
இதழில் வந்தது
ஆண் : இனியது இது
கழிந்தது அது இளமை
என்பது உன் உடலில்
உள்ளது
பெண் : நீ போட்டது என்
கண்ணிலே மந்திரம்
ஆண் : நான் பார்த்தது
அழகின் ஆலயம்
பெண் : இது தான்
உலகத்தை ரசிக்கின்ற
பருவம்
ஆண் : தங்க மாங்கனி
என் தர்ம தேவதை
பெண் : பபபபபப பா
பா பா பா பா
ஆண் : நவமணி ரதம்
நடைபெறும் விதம்
நமது கோவிலில் இனி
நல்ல உற்சவம்
பெண் : கவிதைகள் தரும்
கலையுந்தன் வசம்
கங்கையாறுபோல்
இனி பொங்கும் மங்களம்
ஆண் : ஓராயிரம்
தேனாறுகள் வந்தன
பெண் : நீராடுவோம்
தினமும் நீந்துவோம்
ஆண் : சரிதான் நடக்கட்டும்
இளமையின் ரசனை
பெண் : பேரைச் சொல்லவா
அது நியாயமாகுமா
ஆண் : தங்க மாங்கனி
என் தர்ம தேவதை
பெண் : நான் பாடும்
ஸ்ரீராகம் லா ல ல லா
லா ல ல ல
ஆண் : லா லா லா
லா லா லா லா லா
ப ப ப ப ப ப பா பா
பா