பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கங்கை அமரன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் மற்றும் ஆண் :
ருருருருருருரு…..
ருருருருருருருரு….
டுடுடுருருருருருரு…..
பெண் : லலல லலல
லலல லலாலா….
ஆண் : ருருருருருருருறு
டுடுடுருருருருருரு…..
ஆண் : பொங்கும் ஆகாயகங்கை…
ஆண் மற்றும் குழு : கங்கை இளமங்கை
கங்கை இளமங்கை
பெண் : பொங்கும் ஆகாயகங்கை…
குழு : கங்கை இளமங்கை
கங்கை இளமங்கை
ஆண் : என் கால்களே சிறகானதே
சிரிக்கின்ற ஓசை கேட்டு
பெண் : பொங்கும் ஆகாயகங்கை…
குழு : கங்கை இளமங்கை
கங்கை இளமங்கை
ஆண் : புது ராக ஜாதிகளின் ஊர்வலம்
இன்று காலை நானே பார்த்தேனே
அவள் பூக்கள் சுமந்திருக்கும் வானவில்
இனி நானும் வானம் போவேனே
பெண் : உன் ஞாபகம் சுக வேதனை
ஆண் : நீ பேசினால் இசை வாசனை
இனி நாளும் காதல் சிந்தனை
பெண் : நீ வந்தால் போதும் நிம்மதி
ஆண் : உன் கண்ணால் கொஞ்சம் சம்மதி
பெண் : பொங்கும் ஆகாயகங்கை…
குழு : கங்கை இளமங்கை
கங்கை இளமங்கை
ஆண் : ஜன்னல் ஓரம் பூத்த ஒரு தாமரை
சொந்த வாசல் தாண்டி வாராதோ
பெண் : எந்தன் ஊமை
பார்வைகளின் பாஷைகள்
உந்தன் காதல் காதில் கேளாதோ
ஆண் : என் கண்களில் நடமாடி வா
பெண் : உந்தன் தூக்கத்தை கலந்தோடவா
ஆண் : கண்ணன் காமன் தோட்டம் அல்லவா
பெண் : யார் இல்லை என்று சொன்னது
ஆண் : வரம் தந்தால் தேவி நல்லது
பெண் : உன் கால்களே சிறகானதோ
சிரிக்கின்ற ஓசை கேட்டு
ஆண் மற்றும் பெண் :
பொங்கும் ஆகாயகங்கை…
குழு : கங்கை இளமங்கை
கங்கை இளமங்கை