Potri Paadadi Penne Song Lyrics

in Thevar Magan

பாடகர்கள் : மனோ, டி. கே. எஸ். கலைவாணன்

மற்றும் ஷ்ருதி ஹாசன்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : போற்றிப் பாடடி பொண்ணே…
தேவர் காலடி மண்ணே….
தெக்கு திசை ஆண்ட
மன்னர் இனம்தான் ஹோய்…
முக்குலத்த சேர்ந்த
தேவர் மகன்தான் ஹோய்…

ஆண் : போற்றிப் பாடடி பொண்ணே…
தேவர் காலடி மண்ணே….

ஆண் : என்ன சொல்ல மண்ணு வளம்….
குழு : டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ…
ஆண் : மத்தவங்க கண்ணு படும்
குழு : டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ…

ஆண் : என்ன சொல்ல மண்ணு வளம்
மத்தவங்க கண்ணு படும்
அந்த கதை இப்ப உள்ள
சந்ததிங்க கேட்க வேணும்

ஆண் : நம்முயிர்க்கு மேல
மானம் மரியாதை
மானம் இழந்தாலே வாழ தெரியாதே
பெரிசல்லாம் சொன்னாங்க
சொன்னபடி நின்னாங்க
குணத்தால் மனத்தால்
கலை மான் ஆனாங்க

பெண் : போற்றிப் பாடடி பொண்ணே…
தேவர் காலடி மண்ணே….
தெக்கு திசை ஆண்ட
மன்னர் இனம்தான் ஹோய்…
முக்குலத்த சேர்ந்த
தேவர் மகன்தான் ஹோய்…

பெண் : போற்றிப் பாடடி பொண்ணே…
தேவர் காலடி மண்ணே….

ஆண் : முன்னோருக்கு முன்னோரெல்லாம்…..
குழு : டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ…
ஆண் : இன்னாருன்னு கண்டு கொள்ள
குழு : டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ…

ஆண் : முன்னோருக்கு முன்னோரெல்லாம்
இன்னாருன்னு கண்டு கொள்ள
ஏடெடுத்து எழுதி சொல்ல
ஒண்ணு ரெண்டு மூணு அல்ல

ஆண் : முக்குலத்தோர் கல்யானந்தேன்
முத்து முத்து கம்பலந்தேன்
எக்குலமும் வாழ்த்து சொல்லும்
எங்களுக்கு எக்காளம்தேன்
அழகான சரிஜோடி
ஆணைமேல அம்பாரி
கணக்கா வழக்கா கடல்போல் ஏராளம்

பெண் : போற்றிப் பாடடி பொண்ணே…
தேவர் காலடி மண்ணே….
தெக்கு திசை ஆண்ட
மன்னர் இனம்தான் ஹோய்…
முக்குலத்த சேர்ந்த
தேவர் மகன்தான் ஹோய்…

பெண் : போற்றிப் பாடடி பொண்ணே…
தேவர் காலடி மண்ணே…

Leave a Comment