Putham Pudhu Kaalai Song Lyrics

in Alaigal Oivathillai

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : புத்தம் புது காலை பொன்னிற வேளை
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்

பெண் : புத்தம் புது காலை பொன்னிற வேளை

பெண் : பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான் தாளமோ
மனதின் ஆசைகள் மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள்
அதிகாலையின் வரவேற்புகள்…

பெண் : புத்தம் புது காலை பொன்னிற வேளை

பெண் : ……………………………

பெண் : வானில் தோன்றும் கோலம் அது யார் போட்டதோ
பனி வாடை வீசும் காற்றின் சுகம் யார் தந்ததோ
வயதில் தோன்றிடும் நினைவில் ஆனந்தம்
வளர்ந்தாடுது இசைபாடுது வழிந்தோடுது சுவை கூடுது…

பெண் : புத்தம் புது காலை பொன்னிற வேளை
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்

பெண் : லாலாலா..லாலலலாலா….லாலாலலா

Leave a Comment