பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ
ஒரு உறவும் இல்லை
அதில் பிரிவும் இல்லை
அந்தரத்தில் ஊஞ்சல்
ஆடுகிறேன் நாளும்
அந்தரத்தில் ஊஞ்சல்
ஆடுகிறேன் நாளும்
ஆண் : ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ
ஆண் : {கல்லுக்குள் ஈரமில்லை
நெஞ்சுக்கும் இரக்கமில்லை
ஆசைக்கு வெட்கம் இல்லை
அனுபவிக்க யோகமில்லை} (2)
ஆண் : பைத்தியம் தீர வைத்தியம் இல்லை
உலகில் எனக்கு ஒரு வழி இல்லை
ஆண் : ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ
ஆண் : {நிலவுக்கு வானம் உண்டு
மலருக்கு வாசம் உண்டு
கொடிக்கென்று கிளையுமுண்டு
எனக்கென்று என்ன உண்டு} (2)
ஆண் : ஏன் படைத்தானோ
இறைவனும் என்னை
மனதில் எனக்கு நிம்மதி இல்லை
பெண் : ராஜா என்பேன் மந்திரி என்பேன்
ராஜ்ஜியம் உனக்கு உண்டு
ஒரு ராஜகுமாரன் உண்டு
நல்ல உறவு உண்டு
அதில் பரிவு உண்டு
அந்தரத்தில் ஊஞ்சல்
ஆடுவதேன் நாளும்
பெண் : {தெய்வத்தில் உன்னைக் கண்டேன்
தினம் தினம் பூஜை செய்தேன்
நிலவுக்குக் கலங்கம் என்று
உறவுக்கு விலகி நின்றேன்} (2)
பெண் : மயக்கமும் ஏனோ கலக்கமும் ஏனோ
உலகில் உனக்கு சரித்திரம் உண்டு
பெண் : ராஜா என்பேன் மந்திரி என்பேன்
ராஜ்ஜியம் உனக்கு உண்டு
ஒரு ராஜகுமாரன் உண்டு
நல்ல உறவு உண்டு
அதில் பரிவு உண்டு
அந்தரத்தில் ஊஞ்சல்
ஆடுவதேன் நாளும்
அந்தரத்தில் ஊஞ்சல்
ஆடுவதேன் நாளும்