Va Kathirukka Neramillai Song Lyrics

in Kathirukka Neramillai

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வா காத்திருக்க
நேரம் இல்லை ஓ…
நீ பூத்திருக்கும்
வாச முல்லை ஓ…

ஆண் : விரக தாபம்….ம்ம்…
விளையும் காலம்……ம்ம்….
விலகி இருந்தால்
வாடை வாட்டும் வா….

பெண் : வா காத்திருக்க
நேரம் இல்லை ஓ…
நான் பூத்திருக்கும்
வாச முல்லை ஓ…

ஆண் : ஏதோ ஓர் பாதரசம்
ஏறும் உயிர் நாடியிலே ஹா…
காந்தம் உருவாகுமடி
கூடும் இளம் ஜோடியிலே

பெண் : வளைக்கைகள்
நீ சொன்னால்
வளைக்காமல் போகாது
வலிக்காது சீராட்டு
சலிக்காது பூ மாது

ஆண் : ஆசை ஊற்று போலே
வெள்ளமாக பாயும் நேரமே
ஆடை ஈரம் ஆக
நீயும் நானும் நீந்த வேண்டுமே

பெண் : வா காத்திருக்க
நேரம் இல்லை ஓ…
நான் பூத்திருக்கும்
வாச முல்லை ஓ…

பெண் : விரக தாபம்….ம்ம்
விளையும் காலம்……ம்ம்
விலகி இருந்தால்
வாடை வாட்டும் வா….

ஆண் : வா காத்திருக்க
நேரம் இல்லை ஓ…

பெண் : மாலை மணி ஐந்தடித்தால்
மான்தான் உனைத்தேடி வரும்….
காவல் ஒன்று போட்டு வைத்தால்
கால்கள் அதைத் தாண்டி வரும்….

ஆண் : இடை சேர்ந்த பின்னாலே
இடைவேளை கூடாது
இணை சேர்ந்த ஜீவன்கள்
தனித்தென்றும் வாழாது

பெண் : அன்பே நீல வண்ணம்
வானை என்றும் நீங்கிடாது
மீட்டும் விரல் இல்லாது
வாழ்வதேது வீணையானது

ஆண் : வா காத்திருக்க
நேரம் இல்லை ஓ…
நீ பூத்திருக்கும்
வாச முல்லை ஓ…

பெண் : விரக தாபம்….ம்ம்
விளையும் காலம்……ம்ம்
விலகி இருந்தால்
வாடை வாட்டும் வா…..

ஆண் : வா காத்திருக்க
நேரம் இல்லை ஓ…
பெண் : நீ பூத்திருக்கும்
வாச முல்லை ஓ…

Leave a Comment